Search tamil keyword search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA

PM 6:38

காதல் கவிதை...

Posted by Maideen

நான் அழகாயிருக்கும்
தருணங்களில் என்னை
அணைத்துக் கொ(ல்)ள் என்றேன்....

நீயோ என்னை
அணைத்துக் கொண்டேயிருக்கிறாய்....
நான் எல்லாத் தருணங்களிலும்
அழகாயிருக்கிறேன் என்று.....

****

இதயமெல்லாம்
ஏந்திக் கொண்டுருக்கிறாய் என்னை

இருந்தும் இன்னும் கொஞ்சம்
யாசிக்கிறேன் உன்னை ஏன்?

****

நான் உன்னை நேசிக்கத் தான் செய்கிறேன்
நீயோ என்னைத் தான் சுவாசிக்கிறாய்!!!!!
****

உன் கண்ணாடி கன்னத்தில்
எப்போதும் தெரிவது
என் முகம்...

****

உன் காதோர மச்சம்
நான் எச்சில் படுத்த ஏங்குகிறது...

***

என்னிடம் சில்மிஷம் செய்து
செல்லமாய் குத்தும்
உன் மீசை இப்போது missing..
eventhough me always kissing...

****

உன் உதடுகள் செய்த
ஊழ்வினை பயன்

என் உதடுகளால்
அதற்கு எப்போதும் தண்டனை!!!!

****

அரசன் நீ என அறிந்தும்
நான் அரசி என ஆணவமிட்டேன்

நீயோ உன் அரியாசனத்தின் அருகில்
எனக்கு சரியாசனமிட்டு

உன்னையாள என்னை
அழைப்பாய் என அறியாமல்

நான் அரசி என ஆணவமிட்டேன்.....

கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே

வந்துவிடுகின்றன எறும்புகள் என்று

சலித்துக்கொள்கிறாய் நீ

அவற்றுக்குத்தானே தெரியும்

அவை வெறும் கோல மாவு அல்ல

ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது...



நீ போட்டு முடித்த கோலத்தில்

கோலம் போட்டிருந்தன உன்

நெற்றியோரத்திலிருந்து விழுந்த

வியர்வைப்பொட்டுகள்...


மார்கழியின் அதிகாலைகளில்

நீ போடுகிற கோலத்தையும்

கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு

யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்

ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது

சூரியன்...

PM 6:28

வான்மதி ....

Posted by Maideen

என்னுள் காதலெனும்
செடியை நட்டாய்
இன்று மரமாகி நிற்கும் நாம் காதலை
விட்டுப்பிரிய நினைக்கும்
உன்னைத் திட்டக் கூட
மனமில்லாமல் தவிக்கிறேன்
நான் வாடி மடிந்தாலும்…
நீ வாழ்க என்று….!

நாம் ஒன்றாய் கழித்த அந்த
நினைவுகளை என்
இதயத்தில் செதுக்கி விட்டேன்
என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து
கண்ணீரில் கரைக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்
என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும் பிரிந்து
செல்ல நினைக்காதே……
நானில்லாமல் நீயிருப்பாய்………
ஆனால்…..
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்….!

PM 6:24

காதலி ...

Posted by Maideen

முன்பெல்லாம் எனை அனைத்த அலை, இன்று
அடித்தது போலிருந்தது…..
காரணம் கேட்டபோது
“எங்கே உன் தோழன்? என்று
காட்டமாய் விசாரித்தது….

மேற்படிப்பிற்காய் மேல்னாடு போய் விட்டான் என்றேன்….
“தனியாக விட்டு விட்டா???”
வினவியது அலை…..
“இல்லை அவன் நினைவுகள்
என்னுடன் என்றேன்”

அனுதாபமாக பார்த்த அலை
“முன்பெல்லாம் என் பாறை நண்பன்
மேல் உற்கார்ந்து பாடுவீர்களே….
இப்போ என்ன செய்வாய்????”
கேட்டது அலை….

அவனை பிரிந்த பின்பு - நானும்
பாறை தான் என்றேன் !!!

பதறிய அலை
சிதறி என்மேல்
“ஏனுனக்கு நானில்லையா?? - சரி
அடிக்கடி வந்து போவென்றது அன்பாக….!”

அலையின் அன்பில்
சிலிர்த்துப்போய் - மீண்டும்
அவன் நினைவுகளுடன் கரையெறும் போது…..,
என்ன நினைத்ததோ அலை
திரும்பவும் வந்து,
“அடித்தது ரொம்பவும் வலிக்குதோ???”
கேட்டது ஏக்கத்துடன்…!

இல்லை என சிரித்த எனை
சில்லென நீராட்டி தன் சந்தோஷம்
சொல்லிப்போனது அலை….!

ஆனாலும்……
அலைக்கென்ன தெரியும்
என் விஷயத்தில் “அவன்”
சிலையாகிப்போன கதை…….!!!!!

PM 6:20

வாக்குமூலம்

Posted by Maideen

'நான்' என்பது உலகமாயிருந்தது!
பால் எது? சுண்ணாம்பு எது?
விளங்காத போது
'நான்' என்பது உலகமாயிருந்தது.

சூழ்ந்து கடிக்க வந்தன
சுயநலங்கள்.
ஒதுங்கி ஒடுங்கியதில்
'நான்' என்பது தானாய் ச்சிறுத்தது.

இப்போதும்...
இருட்டும் போதெல்லாம்
வழிகளின் பயத்திலோ
வலிகளின் உணர்விலோ
உறவை, நட்பை உள் வாங்கி
'நான்' சற்றே விரிவதுண்டு.

சமூக வீதிகளில்
யுத்த காலங்களின்
பரஸ்பர தாக்குதல்களில்
இனத்தை மதத்தை
இழுத்தணைத்துக் கொள்ளும் 'நான்'.

அதீத எதிர்பார்ப்புகளின் போதும்
அநாதரவான தருணங்களிலும்
இறை ஆதரவை நாடி ஓடி
இணைந்துக்கொள்ளும் 'நான்'.

ஆதாயங்களின் போதும்
கவனிப்பாரற்று தனிமை காணும் போதும்
தன் கூடடங்கும் 'நான்'.

அளவீடுகளுக்கு அடங்காமல்
மாறிக் கொண்டேயிருக்கும் 'நான்'
மண்ணில் அடங்கிப் பின் தீரும்.

பிரியம் என்பது எளிதல்ல, குறிப்பாக
பிரிந்திருக்கும் தொலை தூரத்தில்.

சந்தேகங்களும் பயங்களும் சாதாரண உறவினிடை
கொந்தளித்துக் கொண்டிருக்கும் இனியும் பிரிந்திருந்தால்...
நாமிருந்த இணையத்தில் குறைந்தபட்சம் சிரித்திருந்தோம்,
நம்மின் சந்தேகத்தினிடையே..., நலமுடன் நாம் தெரிந்திருந்தோம்,
நம்மின் கனிவுமிகு காதலினை..., அதனால் நம் பயமெல்லாம்
மாயமாய் மறைந்ததை நாம் அறிந்துமிருந்தோம்.

ஆனால் இன்றோ நாம் பிரிந்து உள்ளோம்.
அதனால் சில சமயம் எழும் சந்தேகங்களை
இயற்கை என எண்ணிக்கொள்(ல்)வோம்.

இமைப்பொழுதில் உனை நினைக்கையில்
என்றுமில்லாத எதனையோ இழக்கின்றேன்...
உன் புன்னகையின் மெல்லினத்தை,
உன் அன்புநிறை சாரீரத்தை,
எனைச்சுற்றி நீ வளைத்த உன் இதமான வளை கரத்தை...

உன்மேல் நான் கொண்ட அன்பு எத்துனை வலிமையது
என்பதனை உன்னிடம் நிரூபிக்க விடாமல் இந்த து}ரமும்
என்னை தொந்தரவு செய்கிறது...

நீ கொண்டுள்ள பயத்தை, பாரத்தை நிரந்தரமாய் நீக்கிடவும்,
உன் கண்ணெதிரே தோண்றி - நிலைத்திருக்கும்
என் அன்பை உன்னிடத்தில் கொடுத்திடவும்... எனக்கு நீ
எத்துனை உகந்தவள் என்பதனை இதமாய் எடுத்துரைத்திடவும்
என் ஏக்கமெல்லாம் உன்னருகில் நான் வரவே...

இனியவன்...

மனசப் பறிகொடுத்தேனே...- என்
மனசப் பறிகொடுத்தேனே...
பக்கம் வந்த தென்றல்
பார்த்து என்னை சிரிக்க.
முத்தம் தந்த நிலவு.
முல்லைப் பூவாய் மாற.
நெஞ்சுக்குள்..... பூ வாசம்.
கண்ணுக்குள்..... உன் வாசம்.

உதடுகள் விரிவதால்..... கனவுகள் மலர்ந்திடும்.
உதடுகள் குவிவதால்..... நினைவுகள் துளிர்த்திடும்.
உலகைச் சுற்றி... உலா வர...
நீயும் நானும்... பறவையாய் மாறிடுவோம்.
தரணி எங்கும்... தமிழ் மணம் வீச...
நீயும் நானும்... தவம் இருப்போம்.

உறவுகள் இணைவதால்...... திருமணம் மலர்ந்திடும்.
உணர்வுகள் பிணைவதால்..... பிளவுகள் மறைந்திடும்.
கடலைச் சுற்றி... உலா வர...
நீயும் நானும் மீனாய் மாறிடுவோம்.
கண்டு வந்த... புதுமைதமை...
நீயும் நானும்... எடுத்து உரைப்போம்.

வரவுகள் வருவதால்... செல்வங்கள் பெருகிடும்.
வருடங்கள் போவதால்... வயதுகள் மறைந்திடும்
விண்ணைச் சுற்றி... உலா வர...
நீயும் நானும் விண்மீனாய் மாறிடுவோம்.
வேறு கோளில்... வாழ விரும்பினால்...
நீயும் நானும்... வாழ்ந்து காட்டுவோம்...

வானத்து நிலவில்.....
வரைந்த ஓவியமே....!
என் காதல் கதையைக்
கேட்டுப்பார்.....

முற்றத்து நிலவில்....
முல்லைப்பந்தல் நடுவில்
முதல் முறை என் கன்னத்தில்
முத்தமிட்ட சுவாசக் காற்றே - என்
முழு இதையத்தையும்
முகாம் ஆக்கி விட்டாய்.

நிலவின் ஒளியில்.....
நீண்ட நதியின் நடுவில்
முதல் முறை என் விழியில்
வித்திட்ட காதல் தேவதையே - என்
முழு இதயத்தையும்
சேமித்து விட்டாய்;.

மலையின் உச்சியில்.....
மாலை வேளையில்

 

Welcome to D N Tamil ... Copyright 2010 Designed by Kader Maideen