Search tamil keyword search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA

6:24 PM

காதலி ...

Posted by Maideen

முன்பெல்லாம் எனை அனைத்த அலை, இன்று
அடித்தது போலிருந்தது…..
காரணம் கேட்டபோது
“எங்கே உன் தோழன்? என்று
காட்டமாய் விசாரித்தது….

மேற்படிப்பிற்காய் மேல்னாடு போய் விட்டான் என்றேன்….
“தனியாக விட்டு விட்டா???”
வினவியது அலை…..
“இல்லை அவன் நினைவுகள்
என்னுடன் என்றேன்”

அனுதாபமாக பார்த்த அலை
“முன்பெல்லாம் என் பாறை நண்பன்
மேல் உற்கார்ந்து பாடுவீர்களே….
இப்போ என்ன செய்வாய்????”
கேட்டது அலை….

அவனை பிரிந்த பின்பு - நானும்
பாறை தான் என்றேன் !!!

பதறிய அலை
சிதறி என்மேல்
“ஏனுனக்கு நானில்லையா?? - சரி
அடிக்கடி வந்து போவென்றது அன்பாக….!”

அலையின் அன்பில்
சிலிர்த்துப்போய் - மீண்டும்
அவன் நினைவுகளுடன் கரையெறும் போது…..,
என்ன நினைத்ததோ அலை
திரும்பவும் வந்து,
“அடித்தது ரொம்பவும் வலிக்குதோ???”
கேட்டது ஏக்கத்துடன்…!

இல்லை என சிரித்த எனை
சில்லென நீராட்டி தன் சந்தோஷம்
சொல்லிப்போனது அலை….!

ஆனாலும்……
அலைக்கென்ன தெரியும்
என் விஷயத்தில் “அவன்”
சிலையாகிப்போன கதை…….!!!!!

 

Welcome to D N Tamil ... Copyright 2010 Designed by Kader Maideen