Search tamil keyword search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA

6:38 PM

காதல் கவிதை...

Posted by Maideen

நான் அழகாயிருக்கும்
தருணங்களில் என்னை
அணைத்துக் கொ(ல்)ள் என்றேன்....

நீயோ என்னை
அணைத்துக் கொண்டேயிருக்கிறாய்....
நான் எல்லாத் தருணங்களிலும்
அழகாயிருக்கிறேன் என்று.....

****

இதயமெல்லாம்
ஏந்திக் கொண்டுருக்கிறாய் என்னை

இருந்தும் இன்னும் கொஞ்சம்
யாசிக்கிறேன் உன்னை ஏன்?

****

நான் உன்னை நேசிக்கத் தான் செய்கிறேன்
நீயோ என்னைத் தான் சுவாசிக்கிறாய்!!!!!
****

உன் கண்ணாடி கன்னத்தில்
எப்போதும் தெரிவது
என் முகம்...

****

உன் காதோர மச்சம்
நான் எச்சில் படுத்த ஏங்குகிறது...

***

என்னிடம் சில்மிஷம் செய்து
செல்லமாய் குத்தும்
உன் மீசை இப்போது missing..
eventhough me always kissing...

****

உன் உதடுகள் செய்த
ஊழ்வினை பயன்

என் உதடுகளால்
அதற்கு எப்போதும் தண்டனை!!!!

****

அரசன் நீ என அறிந்தும்
நான் அரசி என ஆணவமிட்டேன்

நீயோ உன் அரியாசனத்தின் அருகில்
எனக்கு சரியாசனமிட்டு

உன்னையாள என்னை
அழைப்பாய் என அறியாமல்

நான் அரசி என ஆணவமிட்டேன்.....

 

Welcome to D N Tamil ... Copyright 2010 Designed by Kader Maideen