Search tamil keyword search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA

உப்பானது சாரமற்றுப் போனால். . .?

இனிப்பும் . . கசப்பும்
உரைப்பும். . புளிப்பும்
மாறி மாறி வரும்
வாழ்க்கையில்
கரிப்பு மட்டும்
தங்கும்-
கண்ணீராய். .
வியர்வையாய்.
எளியவனின்
கண்ணீரை
வியர்வையை
உணர்வதற்கே
உடலில் கரிப்பு.
உன்னில்
பொங்கும் இனிப்பால்
யாருக்கும் பலனில்லை.
உணர்வைக் கிளறிவிடும்
கரிப்பே
மனித நேயம்.
எனினும்
உப்பானது சாரமற்றுப்
போனால். . .
எதனால் சாரமேற்றுவாய்?

வண்ணத்துப்பூச்சி !!
பின்னால் எந்த வரலாறும் இதற்கு இல்லை
இது நொடிபோல் பிரிந்திருக்கிறது
தன்னைச் சுற்றியே சிறகடிக்கிறது.
இதற்கு நாளை என்பது இல்லை
தொடர்பில்லை நேற்றுடனும்
இது இன்றுகூட பலபொருள் காட்டி
மயக்கும் சிலேடையாய்.
சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சி இது ..!

இந்த சோகமான மலைகளை வைத்திருக்கிறது
தன் இறகுக்குக் கீழேயே.
சின்னஞ் சிறு மஞ்சள் நிறமாய்
திறக்கிறது மூடும்முன், திறக்குமுன் மூடுகிறது
அட ..!!


எங்கே அது ..??.

 

Welcome to D N Tamil ... Copyright 2010 Designed by Kader Maideen