Search tamil keyword search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA

காதல் - ஒரு அழகான ஓவியம் ...

வரைய தெரிந்தவன் அழகு சேர்க்கிறான் ...

வரைய தெரியாதவன் அதன் அழகை ரசிக்கிறான் ...

ரசிக்க தெரிந்தவனுக்கு அது அற்புதம் ...

ரசிக்க தெரியாதவனுக்கு அது அற்பம் ...

ஓவியம் பழையதாயினும் ...

அது சொல்லும் காவியம் இனியதாகும் ...

காதல் - அழகிய காவியம் பாடும் ஓர் ஓவியம் ....

இன்பமான அமுதென 
இனிக்கின்ற தேனென 
கனியாய்த் தினமென 
மனதுள் இனிப்பவனே. 

தென்றல் குலவுவதாய் 
யன்னல் நிலவாகிறாய் 
மழைச் சாரலாய்
மனதுள் நுழைகிறாய்.

புவிமீதில் தமிழாடி
கவியோடு உறவாடி
குவித்திட்டாய் காதலாடி.
கூவியெனை அழைக்காது

தமிழ்சக்திக் காந்தத்தின்
உமிழ்சக்தியாற் கவிழ்ந்தேன்!!
மின்சக்தி அன்பினால்
என்சக்தி ஏற்றினாய்!

நெற்றியில் புரளும்
கற்றை முடிச்சுருளாலும்
முற்றாக என்னையும்
முழுதாகச் சுருட்டியவனே!

உன் கண்ணிலொளிரும்
கிண்ண மதுரசம்
மண்ணில் வாழும்
எண்ணம் எழுதிடும்!

உன்னைச் சரணடைந்தே
நன்று நன்றெனவே
கன்னல் வாழ்வினையே
என்னாளும் பெறுவோமே!

காதலர் தினமொரு நாள்
தோதல்ல! போதாது!…
காதல் நாதமிசைப்போம்
காலமெல்லாம் வா!வா!

சொல்லடி பெண்ணே !!! 

மனதில் உன்னை
நினைத்தது தவறா?
கனவில் உன்னுடன்
வாழ்ந்தது தவறா...???

உயிரில் உயிராய்
கலந்தது தவறா?
உனக்குள் என்னை
தொலைத்தது தவறா...???

உனக்கென நானும்
சிரித்தது தவறா?
என்னுடன் வாழ
அழைத்தது தவறா...???

உனக்காக காத்து
கிடந்தது தவறா?
உனது பிரிவில்
அழுதது தவறா...???

காதலை என்னுள்
மறைத்தது தவறா?
கண்ணுக்குள் உன்னை
வைத்தது தவறா...???

உன்னை காண
துடித்தது தவறா?
உனது சிரிப்பில்
மகிழ்ந்தது தவறா...???

உன்னை தேடி
அலைந்தது தவறா?
உனக்காய் விலகி
நின்றது தவறா...???

எது தவறென்று
சொல்லடி பெண்ணே
என்னுயிர் எனைவிட்டு
பிரிந்துடும் முன்னே...!!!




 

Welcome to D N Tamil ... Copyright 2010 Designed by Kader Maideen