Search tamil keyword search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA

மருதாணி மருதாணி
மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
கங்கை என்று கானலைக் காட்டும்
காதல் கானல் என்று கங்கையைக் காட்டும்
வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்

மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல்தான்
நிலையான பாடல்தான்
அலையோசை எந்நாளும் ஓயாது
மருதாணி விழியில் ஏன்

அவன் இதய வீட்டில் வாழும்
அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட மாட்டான்
சுடும் நீரும் சுடும் சோறும்
காதலி கை நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி
உணரவில்லை இன்னொரு பாதி

அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய்ப்பால் போலே
எந்நாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்
ஆகமொத்தம் அவசரக் கோலம்
அவளுக்கிது காட்டிடும் காலம்

படம்: சக்கரக்கட்டி
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: மதுஸ்ரீ

PM 5:27

New Tamil Kavithai-கவிதை

Posted by Maideen

அன்பே நலமா……?
நீ அருகில் இருக்கும் போது,
உன் அன்பு எனக்கு தெரியவில்லை.
நீ நெருங்கி வரும் பொழுது,
உன் பாசம் எனக்கு புரியவில்லை.
நீ கனவில் வரும் போது,
உன் நட்பை நான் அறியவில்லை .

ம்…..ம் … இழந்துவிட்டேன்..
அந்த சுகமான நாட்களை.
இப்போது தவிக்கின்றேன்
உன் அன்புக்காக,
பாசத்துக்காக
நேசத்துக்காக.

நீ எங்கு தான் வசிக்கின்றாய்
தொலைவில் இருக்கிறாயா-
ஆனால்
உன் அன்பு எனக்கு தெரிகிறதே
நீ விலகிப் போகிறாயா ?
ஆனால்
உன் பாசம் எனக்கு புரிகிறதே
நீ கனவில் வரவில்லையா- ஆனால்
என் மனதில் நிற்கின்றாயே.
இனியும் என்னை தண்டிக்காதே
இனியவளே….
உன் நலமறிய ஆவல்..
உன் மடலுக்காக காத்திருக்கின்றேன்.
என் மடல் விழி மூடாது

Please Note
இது
என் சொந்த கவிதை அல்ல
NETல் சுட்டது…

PM 5:21

கவிதைகள்-Kavithaihal...

Posted by Maideen

கவிதைகள்

படித்ததில் பிடித்தது

நீ யாருக்கோ
செய்த மெளன
அஞ்சலியைப் பார்த்ததும்…
எனக்கும் செத்துவிடத்
தோன்றியது ….

***************************************

எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….

***************************************

உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…

***************************************

எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…

***************************************

ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்…

***************************************

விலக்க விலக்க
சேரும் தூசி போல
உன்னை மறக்க
முயன்று
தினமும்
தோற்று கொண்டிருக்கிறேன்….

படித்ததில் பிடித்தது…………….

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை

*********************************************

எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….

*********************************************

உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…

*********************************************

எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…

*********************************************

ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்…

*********************************************

நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு
ஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது?…..

*********************************************

நீ ஒன்றுமே
செய்ய வேண்டாம்
சம்மதம் மட்டும்
சொல்
உனக்கும்
சேர்த்து நானே
காதலிக்கிறேன்….

*********************************************

அழவைப்பேன்
உன்னை
அன்பே
என்னை கிள்ளி…

*********************************************

நமக்கு பிடித்த பாடல்
தேநீர் கடையில்
ஓடி கொண்டிருக்கிறது
கடைசி பேருந்ததையும்
விட்டு விட்டு
கேட்டு கொண்டிருக்கிறது
காதல்…

*********************************************

என்னை கொல்ல
வாள் வேண்டாம்
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…

*********************************************

எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும் உன்னை
மறக்க…

*********************************************

எனக்கு மட்டுமல்ல
கடைசியில் உனக்கும்
கிடைக்காமலே போய்விடும்
உன் காதல்….

*********************************************

வெறுக்க விரும்புகிறேன்
உன்னை நான்
விரும்பி வெறுக்கிறாய்
என்னை நீ….

*********************************************

மன்னித்து விடு
நான் உன்னை
மறக்க மறந்துவிட்டேன்….

*********************************************

உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்…

PM 5:18

NET – ல் சுட்டவை ..

Posted by Maideen

எல்லாரிடமும்

பொய்சொல்ல
வேண்டியிருக்கிறது
கண்ணாடியில்
முகம் பார்த்து
சிரிக்கும்போது கூட…

அந்தி வேலைப் பொழுது
அலுவல் முடிவு
அயர்ந்த உடலில்
வியர்வை பூக்கள்
படிகளில் தொங்கியே
பல்லவன் பயணம்
முரட்டு வாகனம்
மிரட்டும் சாலையில்
மூக்கை உரசியது
அவள் வாசனை
அண்ணாந்து பார்த்தேன்
கரிய கூந்தலுடன்
என் இனிய காதலி
மெல்ல குனிந்து
முத்தங்கள் பொழிந்தாள்
என்னைத் தீண்டிய
என் செல்ல மழையே . . .

சுடும் வெயில்
வியர்வை அருவி
நெடுஞ்சாலை
மக்கள் கூட்டம்
காதை பிளக்கும்
வாகன சத்தம்
இது
என் நகர வாழ்க்கை
அவளைத் தொலைத்ததால்
நகரும்
நரக வாழ்க்கை! . . .

உனக்கே தெரியாமல்
உன்னிடம் ஓரு பொக்கிஷம்
ரகசியம் காதைக் கொடு
உன் உள்ளங்கை தான்…

இப்போதெல்லாம்
அடிக்கடி கோவிலுக்கு போகிறேன்
மறு ஜென்மம் உண்டாமே?
உண்டேன்றால்
மறுபடியும் வேண்டுமே
எனக்கு நீ அம்மாவாக!!! .

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் அடிக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளம் இல்லை
அந்த காற்றில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கைவிரல் மோதிரம் தங்கவில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போது வலிக்கவில்லை
அந்த அக்கறை போலே வேறு இல்லை

அவள் வாசல் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

PM 5:15

காதல்?

Posted by Maideen

நான் நடிப்பது

தெரியாததுப் போல்
நெற்றியில் முத்தமிடும்
உன் பாசாங்கும்

நீ முத்தமிட
வேண்டுமென்பதற்காக
தூங்குவதாய் நடிக்கும்
என் பாசாங்கும்தான்
காதலோ?!!

சற்று சிந்தித்து பார்


பொய் வாக்கு உறிதிகளும்
வஞ்சனை வாக்கியங்களும்
வெற்று போராட்டங்களும்
திடீர் உண்ணாவிரதங்களும்
கண் துடைப்பு விலை குறைப்புகளும்
இலவச வேட்டிசட்டைகளும்
வோட்டுக்கு இரு நூறு ரூபாயும்
போட்டிக்கு மத கலவரத்தையும்
தான் பாட்டுக்கு இன கலவரத்தையும்
தூண்டி விடுவது சராசரி மனிதனா?

தீவிரவாதத்தால் பகை போக்கி
மறைந்தவர்களுக்கு பகரம் கோரி
ஓர் இஸ்லாமியனுக்கு
மற்றொரு இந்து
ஓர் உயிருக்கு
மற்றொரு உயிர் என்று
போர் குரல் எழுப்பி செல்லும்
கோழை தீவிரவதியே!

உனது கோழைத்தனமான வீரம்
சோற்றிற்கு மண்டியடிக்கும்
நடுத்தர வர்கத்திடம் தான் செல்லும்.

சமுதாயத்தை திருத்திவது தான்
உன் நோக்கமென்றால்-உனக்கென்று
ஓர் கொள்கை இருந்தால் - தவறு
செய்பவரை தட்டிக்கேள் - அல்லாது
என் போன்ற நடுத்தர வர்கத்திடம்
காட்டாதே உனது கோழை வீரத்தை.

நீ செய்யும் தவறினால்
மற்றுமொரு அமைப்பு உருவாகும்,
அவர்கள் உன்னை சார்ந்தவரை
களை எடுக்க- நீ அவர்களை களை எடுக்க
இறுதியில் அரசியல் சதுரங்கத்தில்
வெறும் காய்களாக போவாய்.
சற்று சிந்தித்து பார்

இரவு போனதும்
நிலவும் போனது
பிரிவு போனதும்
நினைவும் போனது

நிலவு போனதும்
வானம் இருண்டது
நினைவு போனதும்
வாழ்க்கை இருண்டது

வானம் இருண்டதும்
இருள் சூழ்ந்தது
வாழ்க்கை இருந்ததும்
உன் புன்னகை சூழ்ந்தது

இருள் சூழ்ந்ததும்
உலகம் ஓய்ந்தது
புன்னகை சூழ்ந்ததும்
மனம் ஓய்ந்தது

உலகம் ஓய்ந்ததும்
இரவு போனது
மனம் ஓய்ந்ததும்
பிரிவும் போனது

 

Welcome to D N Tamil ... Copyright 2010 Designed by Kader Maideen