Search tamil keyword search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA

கண் விழித்த உடன்
ஏனடா கண் விழித்தோம்? என்று இருந்தது! "இறைவா
இன்று ஒரு நாள்
என்னை குருடனாக்கி விடு! இல்லை என் நாள் குறிப்பில்
இந்த நாளை இல்லாமல் ஆக்கி விடு!"என்றேன் கண் முன்னே இறைவன்
அடடா!
இப்போதல்லாம் இறைவன்
instant coffee போல் ஆகிவிட்டார்! "என்ன வரம் வேண்டும்" என்றார்! "காதலர் தினத்தை கொண்டாட
ஒரு காதலி வேண்டும்" என்றேன்! "சரி எனக்கு
காதலர் தினம் எப்படி இருக்கும் காட்டு" என்றார்! இருவரும் நடக்க தொடங்கினோம்! ஒரு பக்கம்
கையில் ரோஜாவுடன்
காதலர்கள்! மறு பக்கம்
கையில் கருப்பு கொடியுடன்
அரசியல்வாதிகள்! இடையில்
என்னை போலவும்
சில பேர்! காதலர்களின் சுவாசத்தை
சுவாசித்த பலூன்கள்
தெருவெங்கும் துள்ளி விளையாடியது! காதலி இல்லாத
என்னை பார்த்து பரிசு பொருள்கள்
பரிகாசம் செய்தது! பூக்கள் எல்லாம்
பொக்(க)கை வாய் காட்டி சிரித்தது! கடற்கரை,விடுதி,கிழக்கு கடற்கரை சாலை
எங்கும்
காதலர் தினம் கண்ணைப் பறித்தது! இறைவா!
இதற்குத்தான் என்னை குருடாக்க சொன்னேன்! இன்று பூத்த பூக்கள்
தன்னை காதலர்களுக்கு அர்பணித்து! இறைவன் கூட
அலங்காரம் இன்றி நடந்து வந்தார்! இன்று
ஒவ்வொரு வண்ணத்திற்கும்
ஒரு கதை இருக்கிறது! நானோ வண்ணங்கள் அறியாது
கருப்பு வெள்ளையாகவே
இருக்கிறேன்! சுதந்திர தினத்தில்
போர்வையை இழுத்து
போர்த்திக்கொண்டு தூங்கியவர்கள்! அதிகாலைலே விழித்துக்கொண்டு
கொண்டாடினர்
காதலர் தினத்தை! நல்ல விழிப்புணர்வு! அவன்
வாரி வாரி பரிசு கொடுத்தான்! அவள்
மாரி மாரி முத்தம் கொடுத்தாள்! french kiss,
german kiss
என கண்டம் விட்டு
கண்டம் தாண்டிகொண்டிருந்தது முத்தங்கள்! இந்தியாவிற்கும் எனக்கும்
அங்கு இடமில்லை! அடுத்து
pub--காதலர்கள் நிரம்பி வழியும் இடம்! இருட்டும் இல்லை!
வெளிச்சமும் இல்லை!
இரண்டிற்கும் இடையே
ஒரு நிலை இழையோடிக்கொண்டிருந்தது! ஒலி பெருக்கி
இசை என்னும் பெயரில்
என் காதை கிழித்துக்கொண்டிருந்தது! பண்பாடு
எங்களை போல்
ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தது! "கலாச்சார சீரழிவு" என்றார் இறைவன்!இந்த இருட்டில்
எங்கே பொய் கலாச்சாரத்தை தேடுவது? ஆதான் ஏவாள் காதல் கூட
கண்கள் தெரியும் வரைதானாட! மனிதா
நீ செய்யும் காதல்
வெறும் தேகத்தோடுதானாட! அங்கே உணர்ந்து கொண்டேன்!

பெண் ஒருத்தி இறைவனிடம்
"are you free?
shall we celebrate valentines day? " என்றாள்! இறைவனோ
"ஈஸ்வரா என்னைக் கப்பாத்து!"
என அலறியடித்து ஓடினார்! குருடனாக்கிவிடு என்றேன்
இறைவனோ
என் கண்ணை திறந்து வைத்து விட்டார்! காதலர்களே!
ஆடம்பர அலட்டல் கொண்ட
காதலர் தினம் எதற்கு? உள்ளத்தால் செய்யும் காதலுக்கு
ஒவ்வொரு தினமும் காதலர் தினமே!

 

Welcome to D N Tamil ... Copyright 2010 Designed by Kader Maideen