
நான் அழகாயிருக்கும்
தருணங்களில் என்னை
அணைத்துக் கொ(ல்)ள் என்றேன்....
நீயோ என்னை
அணைத்துக் கொண்டேயிருக்கிறாய்....
நான் எல்லாத் தருணங்களிலும்
அழகாயிருக்கிறேன் என்று.....
****
இதயமெல்லாம்
ஏந்திக் கொண்டுருக்கிறாய் என்னை
இருந்தும் இன்னும் கொஞ்சம்
யாசிக்கிறேன் உன்னை ஏன்?
****
நான் உன்னை நேசிக்கத் தான் செய்கிறேன்
நீயோ என்னைத் தான் சுவாசிக்கிறாய்!!!!!
****
உன் கண்ணாடி கன்னத்தில்
எப்போதும் தெரிவது
என் முகம்...
****
உன் காதோர மச்சம்
நான் எச்சில் படுத்த ஏங்குகிறது...
***
என்னிடம் சில்மிஷம் செய்து
செல்லமாய் குத்தும்
உன் மீசை இப்போது missing..
eventhough me always kissing...
****
உன் உதடுகள் செய்த
ஊழ்வினை பயன்
என் உதடுகளால்
அதற்கு எப்போதும் தண்டனை!!!!
****
அரசன் நீ என அறிந்தும்
நான் அரசி என ஆணவமிட்டேன்
நீயோ உன் அரியாசனத்தின் அருகில்
எனக்கு சரியாசனமிட்டு
உன்னையாள என்னை
அழைப்பாய் என அறியாமல்
நான் அரசி என ஆணவமிட்டேன்.....
கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே
வந்துவிடுகின்றன எறும்புகள் என்று
சலித்துக்கொள்கிறாய் நீ
அவற்றுக்குத்தானே தெரியும்
அவை வெறும் கோல மாவு அல்ல
ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது...
நீ போட்டு முடித்த கோலத்தில்
கோலம் போட்டிருந்தன உன்
நெற்றியோரத்திலிருந்து விழுந்த
வியர்வைப்பொட்டுகள்...
மார்கழியின் அதிகாலைகளில்
நீ போடுகிற கோலத்தையும்
கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு
யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது
சூரியன்...
என்னுள் காதலெனும்
செடியை நட்டாய்
இன்று மரமாகி நிற்கும் நாம் காதலை
விட்டுப்பிரிய நினைக்கும்
உன்னைத் திட்டக் கூட
மனமில்லாமல் தவிக்கிறேன்
நான் வாடி மடிந்தாலும்…
நீ வாழ்க என்று….!
நாம் ஒன்றாய் கழித்த அந்த
நினைவுகளை என்
இதயத்தில் செதுக்கி விட்டேன்
என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து
கண்ணீரில் கரைக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்
என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும் பிரிந்து
செல்ல நினைக்காதே……
நானில்லாமல் நீயிருப்பாய்………
ஆனால்…..
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்….!
முன்பெல்லாம் எனை அனைத்த அலை, இன்று
அடித்தது போலிருந்தது…..
காரணம் கேட்டபோது
“எங்கே உன் தோழன்? என்று
காட்டமாய் விசாரித்தது….
மேற்படிப்பிற்காய் மேல்னாடு போய் விட்டான் என்றேன்….
“தனியாக விட்டு விட்டா???”
வினவியது அலை…..
“இல்லை அவன் நினைவுகள்
என்னுடன் என்றேன்”
அனுதாபமாக பார்த்த அலை
“முன்பெல்லாம் என் பாறை நண்பன்
மேல் உற்கார்ந்து பாடுவீர்களே….
இப்போ என்ன செய்வாய்????”
கேட்டது அலை….
அவனை பிரிந்த பின்பு - நானும்
பாறை தான் என்றேன் !!!
பதறிய அலை
சிதறி என்மேல்
“ஏனுனக்கு நானில்லையா?? - சரி
அடிக்கடி வந்து போவென்றது அன்பாக….!”
அலையின் அன்பில்
சிலிர்த்துப்போய் - மீண்டும்
அவன் நினைவுகளுடன் கரையெறும் போது…..,
என்ன நினைத்ததோ அலை
திரும்பவும் வந்து,
“அடித்தது ரொம்பவும் வலிக்குதோ???”
கேட்டது ஏக்கத்துடன்…!
இல்லை என சிரித்த எனை
சில்லென நீராட்டி தன் சந்தோஷம்
சொல்லிப்போனது அலை….!
ஆனாலும்……
அலைக்கென்ன தெரியும்
என் விஷயத்தில் “அவன்”
சிலையாகிப்போன கதை…….!!!!!
'நான்' என்பது உலகமாயிருந்தது!
பால் எது? சுண்ணாம்பு எது?
விளங்காத போது
'நான்' என்பது உலகமாயிருந்தது.
சூழ்ந்து கடிக்க வந்தன
சுயநலங்கள்.
ஒதுங்கி ஒடுங்கியதில்
'நான்' என்பது தானாய் ச்சிறுத்தது.
இப்போதும்...
இருட்டும் போதெல்லாம்
வழிகளின் பயத்திலோ
வலிகளின் உணர்விலோ
உறவை, நட்பை உள் வாங்கி
'நான்' சற்றே விரிவதுண்டு.
சமூக வீதிகளில்
யுத்த காலங்களின்
பரஸ்பர தாக்குதல்களில்
இனத்தை மதத்தை
இழுத்தணைத்துக் கொள்ளும் 'நான்'.
அதீத எதிர்பார்ப்புகளின் போதும்
அநாதரவான தருணங்களிலும்
இறை ஆதரவை நாடி ஓடி
இணைந்துக்கொள்ளும் 'நான்'.
ஆதாயங்களின் போதும்
கவனிப்பாரற்று தனிமை காணும் போதும்
தன் கூடடங்கும் 'நான்'.
அளவீடுகளுக்கு அடங்காமல்
மாறிக் கொண்டேயிருக்கும் 'நான்'
மண்ணில் அடங்கிப் பின் தீரும்.
பிரியம் என்பது எளிதல்ல, குறிப்பாக
பிரிந்திருக்கும் தொலை தூரத்தில்.
சந்தேகங்களும் பயங்களும் சாதாரண உறவினிடை
கொந்தளித்துக் கொண்டிருக்கும் இனியும் பிரிந்திருந்தால்...
நாமிருந்த இணையத்தில் குறைந்தபட்சம் சிரித்திருந்தோம்,
நம்மின் சந்தேகத்தினிடையே..., நலமுடன் நாம் தெரிந்திருந்தோம்,
நம்மின் கனிவுமிகு காதலினை..., அதனால் நம் பயமெல்லாம்
மாயமாய் மறைந்ததை நாம் அறிந்துமிருந்தோம்.
ஆனால் இன்றோ நாம் பிரிந்து உள்ளோம்.
அதனால் சில சமயம் எழும் சந்தேகங்களை
இயற்கை என எண்ணிக்கொள்(ல்)வோம்.
இமைப்பொழுதில் உனை நினைக்கையில்
என்றுமில்லாத எதனையோ இழக்கின்றேன்...
உன் புன்னகையின் மெல்லினத்தை,
உன் அன்புநிறை சாரீரத்தை,
எனைச்சுற்றி நீ வளைத்த உன் இதமான வளை கரத்தை...
உன்மேல் நான் கொண்ட அன்பு எத்துனை வலிமையது
என்பதனை உன்னிடம் நிரூபிக்க விடாமல் இந்த து}ரமும்
என்னை தொந்தரவு செய்கிறது...
நீ கொண்டுள்ள பயத்தை, பாரத்தை நிரந்தரமாய் நீக்கிடவும்,
உன் கண்ணெதிரே தோண்றி - நிலைத்திருக்கும்
என் அன்பை உன்னிடத்தில் கொடுத்திடவும்... எனக்கு நீ
எத்துனை உகந்தவள் என்பதனை இதமாய் எடுத்துரைத்திடவும்
என் ஏக்கமெல்லாம் உன்னருகில் நான் வரவே...
இனியவன்...
மனசப் பறிகொடுத்தேனே...- என்
மனசப் பறிகொடுத்தேனே...
பக்கம் வந்த தென்றல்
பார்த்து என்னை சிரிக்க.
முத்தம் தந்த நிலவு.
முல்லைப் பூவாய் மாற.
நெஞ்சுக்குள்..... பூ வாசம்.
கண்ணுக்குள்..... உன் வாசம்.
உதடுகள் விரிவதால்..... கனவுகள் மலர்ந்திடும்.
உதடுகள் குவிவதால்..... நினைவுகள் துளிர்த்திடும்.
உலகைச் சுற்றி... உலா வர...
நீயும் நானும்... பறவையாய் மாறிடுவோம்.
தரணி எங்கும்... தமிழ் மணம் வீச...
நீயும் நானும்... தவம் இருப்போம்.
உறவுகள் இணைவதால்...... திருமணம் மலர்ந்திடும்.
உணர்வுகள் பிணைவதால்..... பிளவுகள் மறைந்திடும்.
கடலைச் சுற்றி... உலா வர...
நீயும் நானும் மீனாய் மாறிடுவோம்.
கண்டு வந்த... புதுமைதமை...
நீயும் நானும்... எடுத்து உரைப்போம்.
வரவுகள் வருவதால்... செல்வங்கள் பெருகிடும்.
வருடங்கள் போவதால்... வயதுகள் மறைந்திடும்
விண்ணைச் சுற்றி... உலா வர...
நீயும் நானும் விண்மீனாய் மாறிடுவோம்.
வேறு கோளில்... வாழ விரும்பினால்...
நீயும் நானும்... வாழ்ந்து காட்டுவோம்...
வானத்து நிலவில்.....
வரைந்த ஓவியமே....!
என் காதல் கதையைக்
கேட்டுப்பார்.....
முற்றத்து நிலவில்....
முல்லைப்பந்தல் நடுவில்
முதல் முறை என் கன்னத்தில்
முத்தமிட்ட சுவாசக் காற்றே - என்
முழு இதையத்தையும்
முகாம் ஆக்கி விட்டாய்.
நிலவின் ஒளியில்.....
நீண்ட நதியின் நடுவில்
முதல் முறை என் விழியில்
வித்திட்ட காதல் தேவதையே - என்
முழு இதயத்தையும்
சேமித்து விட்டாய்;.
மலையின் உச்சியில்.....
மாலை வேளையில்
மருதாணி மருதாணி
மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
கங்கை என்று கானலைக் காட்டும்
காதல் கானல் என்று கங்கையைக் காட்டும்
வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல்தான்
நிலையான பாடல்தான்
அலையோசை எந்நாளும் ஓயாது
மருதாணி விழியில் ஏன்
அவன் இதய வீட்டில் வாழும்
அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட மாட்டான்
சுடும் நீரும் சுடும் சோறும்
காதலி கை நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி
உணரவில்லை இன்னொரு பாதி
அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய்ப்பால் போலே
எந்நாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்
ஆகமொத்தம் அவசரக் கோலம்
அவளுக்கிது காட்டிடும் காலம்
படம்: சக்கரக்கட்டி
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: மதுஸ்ரீ
அன்பே நலமா……?
நீ அருகில் இருக்கும் போது,
உன் அன்பு எனக்கு தெரியவில்லை.
நீ நெருங்கி வரும் பொழுது,
உன் பாசம் எனக்கு புரியவில்லை.
நீ கனவில் வரும் போது,
உன் நட்பை நான் அறியவில்லை .
ம்…..ம் … இழந்துவிட்டேன்..
அந்த சுகமான நாட்களை.
இப்போது தவிக்கின்றேன்
உன் அன்புக்காக,
பாசத்துக்காக
நேசத்துக்காக.
நீ எங்கு தான் வசிக்கின்றாய்
தொலைவில் இருக்கிறாயா-
ஆனால்
உன் அன்பு எனக்கு தெரிகிறதே
நீ விலகிப் போகிறாயா ?
ஆனால்
உன் பாசம் எனக்கு புரிகிறதே
நீ கனவில் வரவில்லையா- ஆனால்
என் மனதில் நிற்கின்றாயே.
இனியும் என்னை தண்டிக்காதே
இனியவளே….
உன் நலமறிய ஆவல்..
உன் மடலுக்காக காத்திருக்கின்றேன்.
என் மடல் விழி மூடாது
Please Note
இது
என் சொந்த கவிதை அல்ல
NETல் சுட்டது…
கவிதைகள்
படித்ததில் பிடித்தது
நீ யாருக்கோ
செய்த மெளன
அஞ்சலியைப் பார்த்ததும்…
எனக்கும் செத்துவிடத்
தோன்றியது ….
***************************************
எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….
***************************************
உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…
***************************************
எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…
***************************************
ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்…
***************************************
விலக்க விலக்க
சேரும் தூசி போல
உன்னை மறக்க
முயன்று
தினமும்
தோற்று கொண்டிருக்கிறேன்….
படித்ததில் பிடித்தது…………….
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை
*********************************************
எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….
*********************************************
உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…
*********************************************
எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…
*********************************************
ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்…
*********************************************
நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு
ஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது?…..
*********************************************
நீ ஒன்றுமே
செய்ய வேண்டாம்
சம்மதம் மட்டும்
சொல்
உனக்கும்
சேர்த்து நானே
காதலிக்கிறேன்….
*********************************************
அழவைப்பேன்
உன்னை
அன்பே
என்னை கிள்ளி…
*********************************************
நமக்கு பிடித்த பாடல்
தேநீர் கடையில்
ஓடி கொண்டிருக்கிறது
கடைசி பேருந்ததையும்
விட்டு விட்டு
கேட்டு கொண்டிருக்கிறது
காதல்…
*********************************************
என்னை கொல்ல
வாள் வேண்டாம்
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…
*********************************************
எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும் உன்னை
மறக்க…
*********************************************
எனக்கு மட்டுமல்ல
கடைசியில் உனக்கும்
கிடைக்காமலே போய்விடும்
உன் காதல்….
*********************************************
வெறுக்க விரும்புகிறேன்
உன்னை நான்
விரும்பி வெறுக்கிறாய்
என்னை நீ….
*********************************************
மன்னித்து விடு
நான் உன்னை
மறக்க மறந்துவிட்டேன்….
*********************************************
உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்…
எல்லாரிடமும்
பொய்சொல்ல
வேண்டியிருக்கிறது
கண்ணாடியில்
முகம் பார்த்து
சிரிக்கும்போது கூட…
அந்தி வேலைப் பொழுது
அலுவல் முடிவு
அயர்ந்த உடலில்
வியர்வை பூக்கள்
படிகளில் தொங்கியே
பல்லவன் பயணம்
முரட்டு வாகனம்
மிரட்டும் சாலையில்
மூக்கை உரசியது
அவள் வாசனை
அண்ணாந்து பார்த்தேன்
கரிய கூந்தலுடன்
என் இனிய காதலி
மெல்ல குனிந்து
முத்தங்கள் பொழிந்தாள்
என்னைத் தீண்டிய
என் செல்ல மழையே . . .
சுடும் வெயில்
வியர்வை அருவி
நெடுஞ்சாலை
மக்கள் கூட்டம்
காதை பிளக்கும்
வாகன சத்தம்
இது
என் நகர வாழ்க்கை
அவளைத் தொலைத்ததால்
நகரும்
நரக வாழ்க்கை! . . .
உனக்கே தெரியாமல்
உன்னிடம் ஓரு பொக்கிஷம்
ரகசியம் காதைக் கொடு
உன் உள்ளங்கை தான்…
இப்போதெல்லாம்
அடிக்கடி கோவிலுக்கு போகிறேன்
மறு ஜென்மம் உண்டாமே?
உண்டேன்றால்
மறுபடியும் வேண்டுமே
எனக்கு நீ அம்மாவாக!!! .
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் அடிக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளம் இல்லை
அந்த காற்றில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கைவிரல் மோதிரம் தங்கவில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போது வலிக்கவில்லை
அந்த அக்கறை போலே வேறு இல்லை
அவள் வாசல் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
நான் நடிப்பது
தெரியாததுப் போல்
நெற்றியில் முத்தமிடும்
உன் பாசாங்கும்
நீ முத்தமிட
வேண்டுமென்பதற்காக
தூங்குவதாய் நடிக்கும்
என் பாசாங்கும்தான்
காதலோ?!!
சற்று சிந்தித்து பார்
பொய் வாக்கு உறிதிகளும்
வஞ்சனை வாக்கியங்களும்
வெற்று போராட்டங்களும்
திடீர் உண்ணாவிரதங்களும்
கண் துடைப்பு விலை குறைப்புகளும்
இலவச வேட்டிசட்டைகளும்
வோட்டுக்கு இரு நூறு ரூபாயும்
போட்டிக்கு மத கலவரத்தையும்
தான் பாட்டுக்கு இன கலவரத்தையும்
தூண்டி விடுவது சராசரி மனிதனா?
தீவிரவாதத்தால் பகை போக்கி
மறைந்தவர்களுக்கு பகரம் கோரி
ஓர் இஸ்லாமியனுக்கு
மற்றொரு இந்து
ஓர் உயிருக்கு
மற்றொரு உயிர் என்று
போர் குரல் எழுப்பி செல்லும்
கோழை தீவிரவதியே!
உனது கோழைத்தனமான வீரம்
சோற்றிற்கு மண்டியடிக்கும்
நடுத்தர வர்கத்திடம் தான் செல்லும்.
சமுதாயத்தை திருத்திவது தான்
உன் நோக்கமென்றால்-உனக்கென்று
ஓர் கொள்கை இருந்தால் - தவறு
செய்பவரை தட்டிக்கேள் - அல்லாது
என் போன்ற நடுத்தர வர்கத்திடம்
காட்டாதே உனது கோழை வீரத்தை.
நீ செய்யும் தவறினால்
மற்றுமொரு அமைப்பு உருவாகும்,
அவர்கள் உன்னை சார்ந்தவரை
களை எடுக்க- நீ அவர்களை களை எடுக்க
இறுதியில் அரசியல் சதுரங்கத்தில்
வெறும் காய்களாக போவாய்.
சற்று சிந்தித்து பார்
இரவு போனதும்
நிலவும் போனது
பிரிவு போனதும்
நினைவும் போனது
நிலவு போனதும்
வானம் இருண்டது
நினைவு போனதும்
வாழ்க்கை இருண்டது
வானம் இருண்டதும்
இருள் சூழ்ந்தது
வாழ்க்கை இருந்ததும்
உன் புன்னகை சூழ்ந்தது
இருள் சூழ்ந்ததும்
உலகம் ஓய்ந்தது
புன்னகை சூழ்ந்ததும்
மனம் ஓய்ந்தது
உலகம் ஓய்ந்ததும்
இரவு போனது
மனம் ஓய்ந்ததும்
பிரிவும் போனது
சமூகமே....
எங்களுக்கு
ஏன் இந்த அவலம்?
உன் பார்வை
எங்கள் மீது மட்டும்
ஏன் வீசுகிறது அமிலம்?
சம்பளம் அதிகம் என்கிறீர்கள்...
இரவும் பகலும் விழித்து
சில ஆயிரம் வாங்கும்
எங்களை
ஆத்திரம் தீர திட்டுகிறீர்கள்!
ஒன்றுமே செய்யாமல்
பல கோடி வாங்கும்
ஹீரோக்களுக்கு
ஆரத்தி எடுத்து வரவேற்கிறீர்கள்!
நாங்கள் வரி கட்டி
சம்பாதிப்பதை
எங்களிடமிருந்து
வரி கட்டாமல்
சம்பாதிபவர்களே அதிகம்!
வரி கட்டியது தவறா?
இல்லை
பல பேர்
எங்களால் வாழ்ந்தது தவறா?
தொலைகாட்சியில்
எங்களை
கேலி பொருளாகவும்
பாவங்களை சுமக்கும்
பாவிகளாகவும் பாவித்தீர்கள்!
சினிமாவில்
இன்னும்
ஒரு படி மேலே போய்
கொலையும் செய்தீர்கள்!
எங்களால் மட்டுமே
கலாசார சீரழிவு
என சொல்லி
எங்கள் முகமூடியை போட்டு
நீங்களும்
கலாச்சாரத்தை கொஞ்சம் சீரழித்தீர்கள்!
ஊடகங்கள்
எங்களை
ஊனம் ஆக்கியது!
மக்களிடமிருந்து
எங்களை
தூரம் ஆக்கியது!
அப்படி
என்ன தவறு செய்தோம்?
தகவல் தொழில்நுட்பம்
என்னும்
அறைக்குள்ளே
சிறையானோம்!
அதனால்
கவிஞனின்
கவிதைக்கு
இரையானோம்!
எங்களை உன்
கவிதைக்கு
உணவாக்கி
உண்டு கொழிக்கும்
கவிஞனே!
நாங்கள்
என்ன தவறு செய்தோம்?
சரிந்தது பொருளாதாரம்!
விழுந்தது தகவல் தொழில்நுட்பம்!
நேற்று வாங்கிய
முழு சம்பளம் போய்
இன்று வாங்கும்
அரை சம்பளம் கூட
நாளை கிடைக்குமா?
என தெரியாமல்
பாதாளத்தில் விழுந்து விட்டோம்!
கை கொடுத்து தூக்காமல்
சுற்றி நின்று
கை கொட்டி சிரிக்கிறீர்கள்!
அந்நியனுக்கு தான்
வேலை செய்கிறோம்
நாங்கள்
அந்நியன் இல்லை!
சகோதிரன் கூட
சதிகாரனாக பார்கிறான்!
என்ன தவறு செய்தோம்?
கணிணியை
தொட்டதை தவிர
என்ன தவறு செய்தோம்?
இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!
நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்
வாசனை இருக்கலாம்!
ஆனால் வாழ்கையில்....?
தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!
எங்கள் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயனத்தூனூடே
விற்றுவிட்டு
கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!
மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வார விடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில்
விரால் பாய்ச்சல்
மாட்டுவண்டி பயணம்
நோன்புநேரத்துக் காஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோழி என
சீசன் விளையாட்டுக்கள்!
ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்ப்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளூர்
உலககோப்பை கிரிக்கெட்!
இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போர்டும் வந்து...
விழிகளை நினைத்து விடுகிறது.!
வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள்
மறந்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும்" - என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக
சங்கடத்தோடு
ஒரு
தொலைப்பேசி வாழ்த்தூனூடே
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து
ஏழைகள்தான்!
காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திகளுக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்கலெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலேயே...
கரைந்துவிடுகிறார்கள்!
'இறுதிநாள்' நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டு பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைப்பேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலேயே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?
ஒவ்வொரு முறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாசப் பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு
இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!
நமக்கு பிடித்த பாடல்
தேநீர் கடையில்
ஓடி கொண்டிருக்கிறது
கடைசி பேருந்ததையும்
விட்டு விட்டு
கேட்டு கொண்டிருக்கிறது
காதல்…
*********************************************
என்னை கொல்ல
வாள் வேண்டாம்
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…
*********************************************
எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும் உன்னை
மறக்க…
*********************************************
எனக்கு மட்டுமல்ல
கடைசியில் உனக்கும்
கிடைக்காமலே போய்விடும்
உன் காதல்….
*********************************************
வெறுக்க விரும்புகிறேன்
உன்னை நான்
விரும்பி வெறுக்கிறாய்
என்னை நீ….
*********************************************
மன்னித்து விடு
நான் உன்னை
மறக்க மறந்துவிட்டேன்….
*********************************************
உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……
ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்…
*********************************************
நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு
ஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது?…..
*********************************************
நீ ஒன்றுமே
செய்ய வேண்டாம்
சம்மதம் மட்டும்
சொல்
உனக்கும்
சேர்த்து நானே
காதலிக்கிறேன்….
*********************************************
அழவைப்பேன்
உன்னை
அன்பே
என்னை கிள்ளி…
*********************************************
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை
*********************************************
எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….
*********************************************
உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…
*********************************************
எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…
*********************************************
போன வார நடுநிசியில்
வயதான நாயொன்று
வசதியான இடத்திலிருந்து
கானமிசைக்க தொடங்கியது
நேற்று முளைத்த நாய்களெல்லாம்
வயதானதனை மதிப்பதில்லை
என வருத்தத்தோடுவொரு வகுளாபரணம்
தம்மினத்தின் குணம் காக்கும்
தனதிருப்பின் முக்கியத்தை
நாயுலகம் உணருவதில்லையென
உயிர்நிலையிலிருந்துவொரு முகாரி
உயிர்வாழ இரை தேடும்
இன்றியமையா இடைவெளியிலும்
இ(ம்)சையை பாட நேர்ந்த.தன் அவலத்தை
எண்ணிவொரு ஏமாவதி
எத்தனை வித கானங்கள் அதில்
எத்தனையெத்தனை விசயங்கள்
உணரா மர உலகை தனக்குள்ளே
நொந்துவொரு நடபைரவி
அவசரமாய் ஓடிவந்து
அதிவிரைவு பேருந்துக்கு
காத்திருந்த இடைவெளியில்
ஆரம்பித்தான் காலனிவாசி
"வாரமா அந்த நாயோட
ஊளை தாங்க முடியலில்ல?"
பணம்
பொருளாதார
மின்சாரம்
அரசாங்கத்தின்
அலாவுதீன்
விளக்கு
பணமே !
கரன்ஸிநோட்டில்
நீ
பதிவு
செய்திருப்பது
கலையெழுத்து
அல்ல,
பலரின்
தலையெழுத்து
நேர்மையாய்
வியாபாரம்
செய்தால்
நீ
வெள்ளை
கணக்கில்
விபச்சாரம்
செய்தால்
நீ
கறுப்பு
ஸ்விஸ்வங்கியில்
ரகசியமாய்
உன்னைச்
சிறை
வைத்தாலும்,
உலகை
தொடர்ந்து
ஆள்பவன்
நீ
நீ
ஒரு
பாரபட்ச
பல்லாக்கு
ஏழை
உன்னை
சுமக்கிறான்
நீ
பணக்காரனை
சுமக்கிறாய்
வாழ்க்கை
நீ
இருந்தால்
துபாய்
இல்லாவிட்டால்
கிழிந்த பாய்
என்னை போல் நண்பனை தொலைத்த நண்பர்களுக்காக
என் காதலி கூட
இதயத்தை எதிர்பார்த்தல்
எதையும் எதிர்பார்க்காமல்
இருந்தான்
என் நண்பன்! தாய் வழி சொந்தமோ?
தந்தை வழி சொந்தமோ?
இல்லை
ஆனாலும் பழகினோம்
மாமா மச்சான் என்று! அறுசுவையும் அற்பமே
என் நண்பன் சொல்லும்
நகைச்சுவை முன்னால்! இரவுக்கு துனையாக
கதை பேசிவிட்டு
வகுப்பில்
தூங்கிக் கொண்டிருந்தோம்! அதனால்தான்
பரிச்சையில் திருதிருவென
விழித்துக் கொண்டிருந்தோம்!
ஆபத்தில் கைகொடுப்பான்
நண்பன்
semester exam இல்
அவன் கொடுத்த
பிட் இல் தெரிந்து கொண்டேன்! மைதானங்கள்
மிரண்டுபோகும் அளவுக்கு
அடித்துக் கொள்வோம்! அலை அடித்தல்
கடலுக்கு வலிக்குமா என்ன? மறு கணமே
தோல் மேல் கைபோட்டு
அணைத்துக் கொள்வோம்! கணக்குப் பார்த்து வாழ்ந்தது இல்லை
ஆனாலும்
ஞாபகப் படுத்திக் கொண்டிருப்பான்
canteen முதலாளி! நான்கு வரியில் அசத்தும்
ஹைக்கூ போல வந்தாய்! பாட்டி சொன்ன கதை போல்
சட்டென முடிந்து விட்டாய்!
busy என்னும்
ஒற்றை வரியில்
நம் வாழ்வை
துளைத்து விட்டோம்! அனுப்பும்
forward மெயில்லும்!
எழுதும்
நட்பு கவிதையும்!
பார்க்கும்
நண்பன் பெயர்களும்! தேடிப் பிடித்து
கொண்டு வரும்
நண்பன் முகத்தை! வறண்ட பாலைவனத்தில்
ஈரத்தை காட்டிவிட்டு
சென்றுவிட்டாய்
இன்றும்
உன்னை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஈரம் காயாமல்! அன்று
கையில் காசு இல்லை!
ஆனாலும்
நட்பு பாராட்ட நீ இருந்தாய்! இன்று
கை நிறைய காசு
பை நிறைய credit card debit card
ஆனாலும்
எதுவும் நட்பு பாராட்டவில்லை
உன்னை போல்!
எனக்கு
எல்லாத்தையும் கொடுத்து
இல்லாதவனாய்
ஆகிவிட்டது IT!
கண் விழித்த உடன்
ஏனடா கண் விழித்தோம்? என்று இருந்தது! "இறைவா
இன்று ஒரு நாள்
என்னை குருடனாக்கி விடு! இல்லை என் நாள் குறிப்பில்
இந்த நாளை இல்லாமல் ஆக்கி விடு!"என்றேன் கண் முன்னே இறைவன்
அடடா!
இப்போதல்லாம் இறைவன்
instant coffee போல் ஆகிவிட்டார்! "என்ன வரம் வேண்டும்" என்றார்! "காதலர் தினத்தை கொண்டாட
ஒரு காதலி வேண்டும்" என்றேன்! "சரி எனக்கு
காதலர் தினம் எப்படி இருக்கும் காட்டு" என்றார்! இருவரும் நடக்க தொடங்கினோம்! ஒரு பக்கம்
கையில் ரோஜாவுடன்
காதலர்கள்! மறு பக்கம்
கையில் கருப்பு கொடியுடன்
அரசியல்வாதிகள்! இடையில்
என்னை போலவும்
சில பேர்! காதலர்களின் சுவாசத்தை
சுவாசித்த பலூன்கள்
தெருவெங்கும் துள்ளி விளையாடியது! காதலி இல்லாத
என்னை பார்த்து பரிசு பொருள்கள்
பரிகாசம் செய்தது! பூக்கள் எல்லாம்
பொக்(க)கை வாய் காட்டி சிரித்தது! கடற்கரை,விடுதி,கிழக்கு கடற்கரை சாலை
எங்கும்
காதலர் தினம் கண்ணைப் பறித்தது! இறைவா!
இதற்குத்தான் என்னை குருடாக்க சொன்னேன்! இன்று பூத்த பூக்கள்
தன்னை காதலர்களுக்கு அர்பணித்து! இறைவன் கூட
அலங்காரம் இன்றி நடந்து வந்தார்! இன்று
ஒவ்வொரு வண்ணத்திற்கும்
ஒரு கதை இருக்கிறது! நானோ வண்ணங்கள் அறியாது
கருப்பு வெள்ளையாகவே
இருக்கிறேன்! சுதந்திர தினத்தில்
போர்வையை இழுத்து
போர்த்திக்கொண்டு தூங்கியவர்கள்! அதிகாலைலே விழித்துக்கொண்டு
கொண்டாடினர்
காதலர் தினத்தை! நல்ல விழிப்புணர்வு! அவன்
வாரி வாரி பரிசு கொடுத்தான்! அவள்
மாரி மாரி முத்தம் கொடுத்தாள்! french kiss,
german kiss
என கண்டம் விட்டு
கண்டம் தாண்டிகொண்டிருந்தது முத்தங்கள்! இந்தியாவிற்கும் எனக்கும்
அங்கு இடமில்லை! அடுத்து
pub--காதலர்கள் நிரம்பி வழியும் இடம்! இருட்டும் இல்லை!
வெளிச்சமும் இல்லை!
இரண்டிற்கும் இடையே
ஒரு நிலை இழையோடிக்கொண்டிருந்தது! ஒலி பெருக்கி
இசை என்னும் பெயரில்
என் காதை கிழித்துக்கொண்டிருந்தது! பண்பாடு
எங்களை போல்
ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தது! "கலாச்சார சீரழிவு" என்றார் இறைவன்!இந்த இருட்டில்
எங்கே பொய் கலாச்சாரத்தை தேடுவது? ஆதான் ஏவாள் காதல் கூட
கண்கள் தெரியும் வரைதானாட! மனிதா
நீ செய்யும் காதல்
வெறும் தேகத்தோடுதானாட! அங்கே உணர்ந்து கொண்டேன்!
பெண் ஒருத்தி இறைவனிடம்
"are you free?
shall we celebrate valentines day? " என்றாள்! இறைவனோ
"ஈஸ்வரா என்னைக் கப்பாத்து!"
என அலறியடித்து ஓடினார்! குருடனாக்கிவிடு என்றேன்
இறைவனோ
என் கண்ணை திறந்து வைத்து விட்டார்! காதலர்களே!
ஆடம்பர அலட்டல் கொண்ட
காதலர் தினம் எதற்கு? உள்ளத்தால் செய்யும் காதலுக்கு
ஒவ்வொரு தினமும் காதலர் தினமே!
Feb 14 - இந்நாளை
வெறுப்பவர்களுக்கு
என் ஆதங்கம்
அணைப்பவர்களுக்கு
என் கை குலுக்கல் அன்னையர் தினம்
தந்தையர் தினம்
நண்பர்கள் தினம்
எய்ட்ஸ் ஒழிப்பு தினம்
காதலர் தினம் காதல்தினம் என்ன பாவம் செய்ததோ!!
கவிஞர்களின் கவிதைகளுக்கு
பலியாகி சாம்பலாகிறது! உலகை படைத்த இறைவன்
மனிதனுக்குள் மனதிற்கு பதில்
மசாலாவை வைத்திருந்தால்
காதல் தோன்றிருக்காது
கவிதைகளும் பிறந்திருக்காது கவிஞனே உனக்கு காதலி
இல்லை - அது தான் குறை
காதலி இருந்தால்
காதல் இருந்தால்
Feb 14 - உன்னிடம்
உதை வாங்கி இருக்காது கடவுளின் கை பிடித்து
நாள் முழுதும் உலவி
ஒரு கேள்வி கேட்க மறந்த
என் அருமை கவிஞனே!! மனிதை படைத்த
கடவுளுக்கு
காதலை அழிக்கும்
சக்தி இல்லையா? பிரம்மனே உலகில் வந்து
காதலை கண்டு வியப்பது
எனக்கு வியப்பை தெளிக்கிறது! கண்டம் விட்டு கண்டம்
தாண்டும் fench kiss german kiss..!!
ஹ்ம்ம் .. கவிஞனே!!
உனக்கு காதலி இல்லை.. இருந்தால் தெரியும்
இந்திய முத்தங்களுக்கு
இங்கு இடமில்லை,
அதில் சுகமும் இல்லை என்று!! காதலர் தினம்
கலாசார சீர்கேடா??!! உனது நிறுவனத்தில் நடக்கும்
DJ night என்னும் கூற்றில்
colorful பறவைகளுக்கு நடுவில்
உன்னையும் பார்த்ததாக ஞாபகம்!!
காதல் சம்பலாகினால்லும்
மீண்டும் உயிர் பெற்று
உயர பறக்கும்
பீனிக்ஸ் பறவை! நான் சம்பல்லாகுவது
அழிப்பதற்கு அன்று
மீண்டும்
உயிர் பெற செய்வதற்கு!
உனக்கு காதலி இல்லை
அதனால்
முத்தத்தின் சுகம் அறிய வில்லை என்கிறாய்! காதலி இருந்தால்லும் கூட
கைகள் தாண்டும் சுகத்தை விட
கண்கள் தீண்டும் சுகம் பெரியது என்பேன்! காதலர் தினத்தை நான் எதிர்க்கவில்லை
அதை
கொண்டாடும் விதத்தை தான் எதிர்கிறேன்! எனகொரு காதலி இருந்தால் தினம் தினம்
காதலர் தினம் ஆகி இருப்பேன்!
நண்பா பிரம்மன் வியப்பது
அவன் படைத்த
காதலை கண்டு அல்ல!
அதை மாற்றி படைத்த
மனிதனை கண்டு! நண்பா நான் காதலர்களின்
தலையை கொய்பவன் அல்ல! உன்னை போல உண்மையான காதலர்களுக்கு
தலை வணக்குபவன்!
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?
2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.
3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது
4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.
5. என்னதான் மீக்கு நீனுந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.
6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.
7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.
8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?
9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.
10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.
11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.
12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.
13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.
என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு ....
மூன்று நெருங்கிய நண்பர்களின் பெயர்களைக் கேட்டார்கள்.
உனது பெயரை மூன்று முறை சொன்னேன்.
*
தாமதமானாலும்,
நான் வரும்வரை
காத்திருக்கிறாது காதல்.
தாமதமானதும்,
தேடிக்கொண்டு
வீட்டுக்கே வருகிறது நட்பு!
*
ஒருநாள் பேசாவிட்டாலும்
கோபிக்கிறது காதல்.
யுகம் கடந்து பேசினாலும்
குதூகலிக்கிறது நட்பு!
*
நெடும்பயணத்துக்கான வழியனுப்புதலில்
வண்டி கிளம்பியபின் நீ ஓடிவந்து நீட்டிய
தண்ணீர் பாட்டில் முழுக்க நிரம்பியிருந்தது
நம் நட்பின் ஈரம்!
*
தினமும் பூப் பறித்து தருகிறது காதல்.
பூஞ்செடிக்கு நீரூற்றுகிறது நட்பு!
மனித இனத்தில்
தானும் பிறக்க எண்ணி
ஒவ்வொரு வீட்டிலும்
பிறந்தான் இறைவன்
அம்மாவாக.
எல்லோரும்
விழிக்கும் முன்பே விழித்து
சூடாக தேநீர் தருவாள்
அம்மா.
அந்தச் சுவையான தேநீருக்காகவே
தாமதமாக எழுவார்கள் பிள்ளைகள்.
கால்சட்டைப் பருவத்தில்
சிறுவன்;
மீசை முளைத்த பருவத்தில்
வாலிபன்;
காலம் வெவ்வேறு பெயர்களால்
அழைக்கிறது;
எப்பொழுதும் அம்மாவுக்கு
"சின்னக்குட்டி".
நட்சத்திரங்கள் எல்லாம்
கண்சிமிட்டி ரசிக்கிறது
அம்மாவின் தாலாட்டுப்பாடலை.
தூரலில் நனைந்தால்
துவட்டிக்கொள்ள துண்டாகும்;
கால் இடறி நகம் பெயர்ந்தால்
காயத்தை சுற்றிக்கொள்ள துணியாகும்;
அழுகின்ற பொழுதில் கண்ணீர்
துடைக்கும் கைகளாகும்;
உன் சேலைக்குத்தான் எத்தனை எத்தனை
உருவங்கள்.
வாழ்க்கை உன் மீது
சுமத்துகின்ற வலிகளுக்கெல்லாம்
புன்னகை மட்டுமே பரிசாய்
தருகின்ற வித்தை எங்கு கற்றுக்கொண்டாய்
அம்மா?
கருவில் என்னை
சுமந்த உன்னை
கருவிழியில் சுமந்திட
அனுமதிப்பாயா அன்னையே.
சின்ன கவிதை
என் மேல்
எழும்
என்னவளின் கோபம்
இலைகளின் தோன்றும்
காலை பனித்துளி
என் உயிரே...
உன் இமைகள்
பேசிய மொழியினில் - நான்
வார்த்தைகளற்று
ஊமையானேன்...
என் உயிரின் கலந்த உறவே
உன் முகம் தான் எனக்கு
ஆதவன் - நீயில்லாத
பொழுதேல்லாம் - எனக்கு
இருளில் தான் கழிகிறது...
அன்பனே
உமிழ் நீர் கூட
உன்னை கானாமல்
இறங்கமறுக்கிறது...
நீயும் நானும்
சந்தித்த அந்த
நந்தவ நாட்களில்
என் வசம் நானின்மையால்
நினைவுகளை தேடியலைவது நித்தமும்
என் சுவாசமகிறது....
வண்ணாத்து பூச்சியேன
உன் நினைவுகள்...
உன் கணவுகள்...
என்க்குள் சிறகடிக்கிறது...
கண்ணாளனே....
என் கண்ணில்
என் இதயத்தில்
நிறந்தவணல்ல - என்
ஆத்மாவில் கலந்தவன் - நீ
என்னபற்றிய
தேடல்களுக்கு
உன்னால் மட்டுமே
முன்னுரகளும்
முடிவுரைகளும்
எழுதபட வேண்டும்....
அன்பனே...
"காதல்" என்னும் மூன்ரெழுத்தில்
"பரிசு" நீ அளித்து
"கவலை" என்னும் மூரெழுத்தில்
"பிரிவு" தந்தது ஏன்...?
என் உயிரே...
உன் இமைகள்
பேசிய மொழியினில் - நான்
வார்த்தைகளற்று
ஊமையானேன்...
என் உயிரின் கலந்த உறவே
உன் முகம் தான் எனக்கு
ஆதவன் - நீயில்லாத
பொழுதேல்லாம் - எனக்கு
இருளில் தான் கழிகிறது...
அன்பனே
உமிழ் நீர் கூட
உன்னை கானாமல்
இறங்கமறுக்கிறது...
நீயும் நானும்
சந்தித்த அந்த
நந்தவ நாட்களில்
என் வசம் நானின்மையால்
நினைவுகளை தேடியலைவது நித்தமும்
என் சுவாசமகிறது....
வண்ணாத்து பூச்சியேன
உன் நினைவுகள்...
உன் கணவுகள்...
என்க்குள் சிறகடிக்கிறது...
கண்ணாளனே....
என் கண்ணில்
என் இதயத்தில்
நிறந்தவணல்ல - என்
ஆத்மாவில் கலந்தவன் - நீ
என்னபற்றிய
தேடல்களுக்கு
உன்னால் மட்டுமே
முன்னுரகளும்
முடிவுரைகளும்
எழுதபட வேண்டும்....
அன்பனே...
"காதல்" என்னும் மூன்ரெழுத்தில்
"பரிசு" நீ அளித்து
"கவலை" என்னும் மூரெழுத்தில்
"பிரிவு" தந்தது ஏன்...?
மறக்க முடியாத நினைவுகள்
நான் கவிதை எழுத வேண்டும் - என
நினைத்துவிட்தேன்...
ஏன் தெரியுமா...?
இந்த கவிதயாவது
ஒரு கமலத்தை
உன்னிடம் வெளிபடுத்தாதா?
நாம் சந்தித்த வேலையில்
உன் இனிய நினைவுகள்
என் ஆழ் மனதில் இடிமின்னல் போல் வந்த்து மறைந்தாலும் - நம்
இனிய நினைவுகள் என்னுள் வானமாய் நிலைத்து இருக்கிறது
உன் ச்ந்திப்பு - என்க்குள்
தந்த சிலிர்ப்பு - இன்னும்
மழைச்சாரலாய் என் மனதில்.....!
என் இதயம்
நிறைந்த - என்னவனே
உன் பார்வைகளின்
பரிமாறலின் - என்
பாதையே மாறியது
மறக்கமுடியுமா....?
உன்னோடு பேசும் வேளையில்
என்ன மறந்தேன்...
பலமுறை மடல் வறைந்து பதில் வராமல்
என் உணஎவை மறந்தேன்
உன்னையே நினைத்து என்
உறக்கத்தை மறந்தேன்
இவை அனைத்தயும் நான் மறந்தாலும்
உன் உறவை மட்டும் -
எத்துனை ஜென்மம் எடுத்தாலும்
மறக்கமுடியுமா?
மனித உடலுக்கு காந்த சக்தி உண்டு
என்னும் அறிவியலை
உன் கண்களிலால்
என்னை ஓப்பு கொள்ள செய்தவனே
ஒளியற்ற கண்களுடன்
நானிருப்பது புரியவில்லையா...?
எவையெல்லாம் இனியவையோ
அதில் மட்டும் உன் நினைவுகள் - எனக்கு
வருவதில்லை
கொடியவையிலும் வருகிறது....
நம் பிரிவகள் அளிக்கும் தவம் - திருமணவரம்
வேண்டி தவிர்க்க வைக்கிறது////
உன் நினைவுகளுடன் என் சுவாச கற்று...
ப்ரியங்களுடம் + தவங்களுடன்
உன்னவள்
முட்டை
உனக்கு ஜாதி , மதம்பேதமில்லை!
உள்நாட்டு ,வெளிநாட்டு என்ற மும்
உலக உணவுக்கே உகந்தவன் நீ
வெங்காயம்
காரணமில்லமலா இப்பெயர் பெற்றாய் !
என்னை காயமில்லமலே ,கண்ணீர் வரசெய்தாய்.
அம்மா
அம்மா உன் பெயர் அனைத்து பாஷையின் சங்கமம்!
ஒளி
சூரியனுகும் ஒரு ஒளி!
சந்திரனுக்கும்ஒரு ஒளி!
நட்சத்திரத்திற்கும் ஒரு ஒளி!
இரவு நம் வீடிற்க்கும் ஒரு ஒளி
மின்னடாம் பூச்சிக்கும் ஒரு ஒளி!
கடவுளுக்கும் உண்டு ஒரு ஒளி!
அதுகண்ணுக்கே புலபாத பெரோளி!
சிகரெட்
சிகரெட்விதவை கோலம் பூண்ட நீ!
என்னை ஏன் விதவை ஆகினாய்!
மழை!
கடவுள் குளித்தால் அது மழை!
மனிதன் குளித்தால் அது சாக்கடை!
புது கவிதை,வாங்க நாம புது கவிதை எழுதலாம்.
கவிதை என்பது நம் உள்ளத்துணர்வுக்கு எழுத்து வடிவம் கொடுப்பது என்பது என் கருத்து.
புது கவிதை எழுதுவது ரொம்ப புதுமையான,புரட்சியான,அனைவருக்கும் புரியும்படி,நட மொழியில் எழுதுவது.இதுவும் என் கருத்துதான்.
[நல்ல கவிதை எழுததெரிஞ்சவங்க எங்கிட்ட சண்டைக்கு வராதிங்க],
அதனால சிவாஜி படத்தில வாங்க பழகலாம் சொன்ன மாதிரி வாங்க நாம புது கவிதை எழுதலாம்.
சும்மயிருக்குபோது,அல்லது
எதவது பிடிக்காத வேலைசெஞ்சுட்டுயிருக்கும்போது யோசிங்க கட்டாயம் புதுகவிதை வரும்.
ஒரு பொருளையோ,பிடித்த நிகழ்வுகளையோ நினைங்க தானா வரும்.
ட்ரை பண்ணுங்க
இங்கே நீங்க எழுதுவதுதான் புதுகவிதை,ஆனால
சுட்டு எழுதகூடது இது கண்டிடன் ஒ.கேவா
மேலும் தமிழ்குடும்பத்திலுள்ள அனைவருக்கும் என் anpana ஒரு வேண்டுகொள்
புதுகவிதை misuse செய்ய வேண்டாம் ப்ளீஸ்.............
எதோ எனக்கு தெரிஞ்ச புதுகவிதைகளை எழுதியிருகிரென்.
கவிதை பிடித்தால் எழுத்தவும்,பிடிக்காவிட்டால் கவிதையை மறந்துவிடவும்.
உப்பானது சாரமற்றுப் போனால். . .?
இனிப்பும் . . கசப்பும்
உரைப்பும். . புளிப்பும்
மாறி மாறி வரும்
வாழ்க்கையில்
கரிப்பு மட்டும்
தங்கும்-
கண்ணீராய். .
வியர்வையாய்.
எளியவனின்
கண்ணீரை
வியர்வையை
உணர்வதற்கே
உடலில் கரிப்பு.
உன்னில்
பொங்கும் இனிப்பால்
யாருக்கும் பலனில்லை.
உணர்வைக் கிளறிவிடும்
கரிப்பே
மனித நேயம்.
எனினும்
உப்பானது சாரமற்றுப்
போனால். . .
எதனால் சாரமேற்றுவாய்?
வண்ணத்துப்பூச்சி !!
பின்னால் எந்த வரலாறும் இதற்கு இல்லை
இது நொடிபோல் பிரிந்திருக்கிறது
தன்னைச் சுற்றியே சிறகடிக்கிறது.
இதற்கு நாளை என்பது இல்லை
தொடர்பில்லை நேற்றுடனும்
இது இன்றுகூட பலபொருள் காட்டி
மயக்கும் சிலேடையாய்.
சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சி இது ..!
இந்த சோகமான மலைகளை வைத்திருக்கிறது
தன் இறகுக்குக் கீழேயே.
சின்னஞ் சிறு மஞ்சள் நிறமாய்
திறக்கிறது மூடும்முன், திறக்குமுன் மூடுகிறது
அட ..!!
எங்கே அது ..??.
உடன் பிறப்பு
தாயின் கருவறையில்
சேய்மையாய் பிறந்த உறவு
உதிரம் ஒன்றானாலும்
வாழ்க்கையில்
உதிரக் கூடாத உறவுகள்
சகோதரன் சகோதரி…
ஒன்றாய் பிறந்து
ஒன்றாய் வளர்ந்து
ஒன்றாய் வாழ்வதில்
சிலர்
ஒற்றுமை இழப்பதேன்…?
கருத்துக் கலப்பில்
கரையேராமல்
குருத்துவம் இழக்கும்
இவர்களின்
குருதி உறவுகள்…
அவசர வாழ்க்கைக்கு
ஆசைகள் அதிகம்
அதனால்
அனைத்து தேவைகளுக்கும்
ஆசிரியராவது சுயநலம்…
விட்டுக்கொடுப்பதற்கு
பொருள் இருந்தாலும்
உறவை வெட்டுவதற்கு
பலர்
பொருளாகிறார்கள்…
நீயா…? நானா…?
சுயநலக் களத்தில்
சூனியனர்களாகும்
ஒருதாய் வயிற்று பிள்ளைகள்…
கூடப்பிறந்தவர்களோடு
கூட்டாக வாழாதபோது
கூட்டாளிகளுடன் கூடுவதில்
குணம் நிறக்குமா…?
பக்கத்து வீட்டுக்காரனை
மன்னித்து விடும் மனம்
பாசக்காரனுக்கு அது கொடுப்பது
மரணதண்டனை…
பாசமும் அன்பும்
மதிப்புத் தெரியாதவர்களுக்கு
மத்தியில்
மரணமாகிக் கொண்டிருக்கிறது…
இது
தாய்பாலின் கலப்படமா…?
தாரம் தந்த பாடமா..?
யார் வகுப்பு நடத்தினாலும்
அங்கு
பாசம் குருவானால்
வேசக்கரு களைந்துவிடும்…
உறவில் உறைந்தவர்கள்
பலரின்
உள்ளங்களில் வாழ்கிறார்கள்…
உறவைத் துறந்தவர்கள்
தங்களின்
உள்ளத்தை தொலைக்கிறார்கள்…
தான் என்ற தலைக்கணம்
தரையிறங்கினால்
நாம் என்ற ஒற்றுமை
தலை சிறக்கும்…!